ஒரு பெண்

என்னிடம் ஒரு பெண் அறிமுகமானார். அவர் வேண்டாம். அவரை ஒரு நண்பர் அறிமுகப்படுத்தி வைத்தார். நானும் அவர் நல்லவர் என்ற காரணத்தினால் கொஞ்சம் தெளிவாக பேசிவிட்டேன். வந்தது வினை. அதிலிருந்து அந்தப்பெண் எனக்கு அவரைத்தெரியும், இவரைத்தெரியும் என தினமும் போன் பண்ணி இம்சை பண்ணியெடுக்கிறார். நொந்து போய் அறிமுகப்படுத்திய நண்பரிடம் கேட்டேன். ஏன்? என்று. அதற்கு அவர் சிரித்துக்கொண்டே நாங்க பட்ட அவஸ்தையை நீங்களும் பட வேண்டும் என்கிற நல்ல எண்ணம்தான் என சொல்லி சிரித்தார். அப்புறம் அதுக்கு மனநிலை சரியில்ல சார். அதான் கண்டதையும் பேசும். நீங்க அமைதியா இருங்க. தன்னால விலகிடும் என்றார்.

வி.ஆர்.ஷங்கர்.